ஜோசியக்காரராக மாறிய #பொள்ளாச்சி ஜெயராமன் - ’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ நாங்க என்ன பிஸ்கோத்து பார்ட்டியா' ? என செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆருடம்

 

”அதிமுக எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்தி அதிமுக அரியணை ஏறும்” என ஆருடம் கூறிய #பொள்ளாச்சி ஜெயராமன் '6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா'? என கூறி அனைவரையும் தெறிக்க விட்டார்.

கோவை மாவட்ட #அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் #பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர். 

செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய . #பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன் பேசும் போது, 


”திமுக ஆட்சி பத்து அமாவாசைக்குள் பஞ்சராகி விடும். அதிமுககாரன் அடி வாங்குவதில் விண்ணை தொட்டு நிப்பான். அடிப்பதில் ஆகாயத்தை தாண்டி அடிப்பான். 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள். எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருக்கான் வந்தாலும் சரி. எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுக்கு எஸ்.பி.வேலுமணி ஒருவரே போதும்” என அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர்அதிமுக எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டுவோம். 10 அமாவசைக்குள் அதிமுக அரியணை ஏறும்” என அவர் தெரிவித்தார்.

செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வந்த  அதிமுக தொண்டர்கள் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை, காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றதை கண்டித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Previous Post Next Post