ராஜலட்சுமி கல்லூரி மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!*


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைக்குளம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மாணவ மாணவியருக்கு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு செல்போனும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 

செல்போனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. 

இந்த வகையான குற்றங்கள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் கணிணி வழி குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஆகவே மாணவ மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி ஒன்றுதான் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை, துணை முதல்வர் பியூலா, பேராசிரியர் பாலகணேஷ், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன், தட்டாப்பறை காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post