இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பல உதவிகளைச் செய்தவர் என்ற சிறப்புக்குரியவர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன்
சிறையில் இருந்து தப்பி வந்த ஊமைத்துரைக்கு ஆயுதம் வழங்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலு சேர்த்தவர் தெக்குரூஸ் வாஸ் கோமஸ். நாட்டுக்காகத் தன் சொத்துகள் பலவற்றை வழங்கிய தெக்குரூஸ் வாஸ் கோமஸின் 214ஆம் ஆண்டு வீரவணக்கம் தூத்துக்குடியில் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் நிறுவனர் கோல்டன் பரதர் மற்றும் மாநில தலைவர் ராஜசேகர் பர்ணாந்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் தலைவர் ஹெர்மன் ஹில்டு , மூன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் நெய்தல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்டன், தாமஸ் ஆழி புத்திரன், தேவ் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.