தூத்துக்குடியில் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் 2 தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் 9 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டமான 2 தடுப்பூசி போட்ட மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கும் நிகழ்ச்சி 39வது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்தது
இதில் 2 தடுப்பூசி போட்ட குடும்பங்களை சேர்ந்த 302 பேர் கலந்து கொண்டனர் இதில் ஆண்கள் 3 பேர் பெண்கள் 3 பேர் இளைஞர்கள் 3 பேர் ஆகிய 9 பேர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் வழங்கும் நிகழ்ச்சி 39வது வார்டு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடந்தது
விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாதேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பி.எம். பால்ராஜ் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேருக்கும் தங்க நாணயம் வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணித்தலைவர் விவேகம் ரமேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் எம் .ஆர். கனகராஜ் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ருக்மணி செய்தி ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ் பிள்ளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் உலக முத்து சங்கர் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் கிளை செயலாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்