33 பேர் பலி... 30,744 பேருக்கு இன்று கொரோனா!

 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. கடந்த 3 நாட்களாக தினமும் புதிய தொற்றுக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 30ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில், தனிமைப்படுத்தலிலும் இருக்கிறார்கள்.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதன் மூலம் மொத்த u எண்ணிக்கை 37,178 ஆக உள்ளது.

தினசரி பாதிப்பை பொறுத்தவரை சென்னையில் சற்று குறைந்தும், கோவையில் அதிகரித்தும் காணப்படுகிறது.

சென்னையில் 6452 பேருக்கும், கோவையில் 3886 பேருக்கும், செங்கல்பட்டில் 2377 பேருக்கும் அதிகபட்சமாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Previous Post Next Post