"35 ஆண்டுகால வீட்டுமனை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்"- 'தூத்துக்குடி பிரஸ் கிளப்' சார்பில் கனிமொழி MP யிடம் கோரிக்கை!

"35 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்" என தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP யிடம் 'தூத்துக்குடி பிரஸ் கிளப்'  சார்பில் கனிமொழி MP யிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதனை கேட்டுக் கொண்ட கனிமொழி MP விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தார். 

இதனையடுத்து அவருக்கு 'தூத்துக்குடி பிரஸ் கிளப்' சார்பில் அச்சடிக்கப்பட்ட 2022ம் ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது.

நிகழ்வில், தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன் இணைச்செயலாளர் சிதம்பரம், கெளரவ ஆலோசகர் அருண், செயற்குழு உறுப்பினர்கள் மோகன், அஹமதுஜான், ராஜ், உறுப்பினர்கள் மாரி ராஜா, சாதிக்கான், ஆகியோர் உடனிருந்தனர்.

 


Ahamed

Senior Journalist

Previous Post Next Post