மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது.


தாளவாடி,ஜன.24:

தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்தில் மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை ஆசனூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தாளவாடி அடுத்த கேர்மாளம் மலைக்கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக ஆசனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது கேர்மாளம் தலூதி கிராமத்தை சேர்ந்த கெண்டப்பா(56) என்பவரது மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கெண்டப்பாவிடம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post