யானை தந்ததின் விலை தெரியாமல் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு மாட்டிக்கொண்ட கும்பல்.

தேனி செய்தியாளர், ரா. சிவபாலன்


தேவதானப்பட்டி, -24

தேனி மாவட்டம் பெரியகுளம் வத்தலகுண்டு சாலையில் யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து. தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அதிகாரி தலைமையில் 25- க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்காளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போது தேனி மாவட்ட எல்கை பகுதியில் சந்தேகிக்கும் படி கும்பலாக இருந்தவர்களை சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராஜ் ( 30), முத்தையா (57), உசிலம்பட்டியை சேந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியை சேர்ந்த சரத்குமார்  (30), விஜயக்குமார் ( 60) மற்றும் வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா ( 34) ஆகிய 9 நபர்களையும் கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் வனக்காவலர்கள் சுற்றிவளைத்து கும்பலை பிடிக்கும்போது ஒருவர் மட்டும் வனக்காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடிய சுரேஷ் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் யானை தந்தம் விற்பனை கும்பல் பிடிப்பட்டது குறித்து தேவதானபட்டி வனச்சரக அதிகாரி கூறுகையில் யானை தந்தத்தினை விற்பனை கும்பலில் ஒருவர் முன்னால் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் யானை தந்தங்கள் எவ்வளவு விலை போகும் என தொலை பேசியில் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கொடுத்த தகவலின் அடிபடையில் கடந்த 10 நாட்களாக தேவதானப்பட்டி மற்றும் பெரும்பல்லம் வனச்சரகத்தை சேர்ந்த  வனத்துறையினர் என இரண்டு வனச்சரக வனத்துறையினர் 25 - க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து யானை தந்தம் விற்பனை கும்பலை பிடித்ததாக தெரிவித்தார்.

Previous Post Next Post