இரண்டு வாரங்கள் திறக்கப்படாமல் இருந்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை - இன்று திறக்கப்பட்டு ஆடுகள் விற்பனை.!


தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை-கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து சந்தையில் விற்பனை நடைபெற்றது.

தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது எட்டயபுரம் ஆட்டுச் சந்தை  இங்கு வாரம் சனிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் 

இங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர்,மதுரை, ராமநாதபுரம்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளைக் விற்பனைக்கு கொண்டு வருவார்கள் மேலும் இங்கு ஒரு கோடி ரூபாய் முதல் மூன்று கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.


இதே திருவிழாக்கால ஐந்து கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுவது வழக்கம்.தற்போது தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஆட்டுச்சந்தைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தை கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடைபெற்றது 


தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வியாபாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் மேலும் ஒவ்வொரு ஊர் வாரியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஆடுகளை வாங்குபவர்கள் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி வழங்கப்பட்டது மேலும் சனிடைசர், தெர்மாமீட்டர் கொண்டு சோதனைக்கு பின்னரே சந்தைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து சந்தை இல்லாததால் பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை இருந்தபோதிலும் இந்த வாரம் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று நடைபெற்றது ஆட்டுச் சந்தையில் கொரோனா விதிமுறைகளுடன் சந்தை நடைபெற்றதால் சற்று வியாபாரம் குறைவாத்தான் உள்ளது என்று ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Previous Post Next Post