தங்கச்சிமடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்


தங்கச்சிமடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், கூடுதல் மருத்துவர் மற்றும் மருந்து உபகரணங்களை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை, கால், தலைகளில்  மருந்து கட்டுபோட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 5 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

 இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கச்சிமடம், பாம்பன், பேய்க்கருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இருந்து நாள்தோறும் வெளி நோயாளிகளாக  500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள்  பற்றாக்குறை இருந்து வருவதால் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,  மருந்து உபகரணங்களை  வழங்க வேண்டும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்கள் சார்பில் கை, கால், தலைகளில்  மருந்து கட்டு போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கச்சிமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post