நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!

திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார்  கைது செய்துள்ளனர். 


தென்காசியை சேர்ந்த குமார்(வயது 31), தனலட்சுமி (வயது 25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். 

குமார் சரக்கு வாகன டிரைவராகவும், தனலட்சுமி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தனலட்சுமி தனக்கு துரோகம் செய்து தென்காசியில் உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகமடைந்த குமார் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். 

நேற்று இரவு வாக்குவாதம் முற்றியதில் வீட்டில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தனலட்சுமி கழுத்தை அறுத்து உள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற 15.வேலம்பாளையம் போலீசார் குமாரை கைது செய்து உள்ளனர். மேலும் தனலட்சுமியின் உடலை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
Previous Post Next Post