தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலையில் மதமாற்ற நிர்ப்பந்தம் காரணம் என்ற பாஜகவின் குற்றசாட்டுக்கு தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்.....
தஞ்சாவூர் மிக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற நிர்ப்பந்தம் காரணம் என்ற பாஜக பொய் குற்றச்சாட்டு மதவாத அரசியலின் ஆபாசம்!
1859 முதல் மூன்று நூற்றாண்டு நடக்கும் பள்ளி, ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளது. தற்போது படிக்கும் சுமார் 1000 மாணவர்களில் 70% இந்துக்கள் 5% இஸ்லாமியர்,25% கிறிஸ்தவர்கள் இந்து ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
மூன்று நூற்றாண்டுகள் நடக்காத மதமாற்றம் இப்போது நடக்குமா?சமூக ஒற்றுமை, மதநல்லிணக்கம் நிறைந்த தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடத்த தமிழகம் அனுமதிக்காது! என தெரிவித்துள்ளார்.