லஞ்சம் - போக்குவரத்து எஸ்.ஐ., உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'


கோவையில், லஞ்சம் வாங்கிய, போக்குவரத்து எஸ்.ஐ., உட்பட மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

கோவை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவரும், போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் அனந்த கிருஷ்ணன், ஜெகன் ஆகியோர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக வீடியோ வெளியானது.இதுபற்றி விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.


விசாரணையில், ராமநாதபுரம் சிக்னலில் பணியில் இருந்த எஸ்.ஐ., தேவராஜ் உள்ளிட்ட மூவரும், வேறொரு நபரை நியமித்து, லஞ்ச வசூலில் ஈடுபட்டது உறுதியானது. மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.

Previous Post Next Post