டெல்லி ஜுமா மசூதியின் படிக்கட்டுகளுக்கு அடியில் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை புதைக்க ஔரங்கசீப் உத்தரவிட்டதாக அகில பாரத இந்து மகாசபா தெரிவித்துள்ளது.
டெல்லி ஜமா மசூதியின் கீழ் இந்து கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதாக அகில பாரத இந்து மகாசபா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த இடத்தை தோண்டி எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மசூதிகள் கட்டுவதற்காக முகலாயர்கள் நாட்டில் உள்ள கோவில்களை இடித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமி, கிருஷ்ணா ஜன்மபூமி மற்றும் ஞானவாபி ஆகியவை தெளிவான உதாரணங்களாகும்.
ஔரங்கசீப்பின் ராணுவத்தில் மூத்த தளபதியான கான் ஜஹான் பகதூர், இந்துக்களின் மத ஸ்தலங்களை அழித்துவிட்டு ஜோத்பூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திரும்பியபோது, டெல்லி ஜமா மசூதியின் படிக்கட்டுகளுக்கு அடியில் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை புதைக்க ஔரங்கசீப் உத்தரவிட்டதாக மகாசபா கூறியது.