பெண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்றுள்ளார் 25 வயதான நிகாத் சரீன்.
தெலங்கானாவைச் சேர்ந்த இவர், துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார்.