தூத்துக்குடி தருவை குளத்தில் திருமண விழாவில் வெடி விபத்து வீடுகள் சேதம்.!


தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் இன்று காலை அந்தோணி குரூஸ் என்பவரது வீட்டில் திருமண விழாவிற்காக வெடி வெடிக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக வெடிகளில் மொத்தமாக தீப்பற்றியதில் 

வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. அதில் வெடி போடும் தொழில் செய்து வரும் தாளமுத்துநகரை சேர்ந்த சிங்கரத்திற்கு இரு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. 


பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


இதில் அருகிலிருந்த மூன்று ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும் ஒரு இருசக்கர வாகனமும் தீயில்  சேதமடைந்துள்ளது. இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post