தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 40 ம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக 201 திருவிளக்கு பூஜை

 

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 40 ம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு  இன்று உலக மக்கள் நன்மைக்காகவும், உலக மக்களை மிகவும் அச்சுறுத்திவரும் 

கொரோனா என்கிற கொடிய நோயிலிருந்து நாட்டு மக்கள் முற்றிலுமாக விடுபட்டு அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் , தொழில் வளம் பெறுகவும், நாட்டில் ஒற்றுமை ஓங்கவும், மழைவளம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டியும்,  201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 


இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பஜனை பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் சேலை மற்றும் மஞ்சள்,குங்குமம் அடங்கிய பிரசாத பை வழங்கபட்டது.

Previous Post Next Post