திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தியாகிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட சேலை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.


நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தியாகிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட சேலை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் சுதந்திரத்திற்காக போராடிய 

தியாகிகளை கௌரவிக்கும் விதமாக கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி சேலையில் இயற்கை நிறமிகள் கொண்டு தியாகிகளின் புகைப்படங்களை சேலையில் அச்சிட்டு அந்தந்த தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர். 

சுதந்திர போராட்டத்தில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற தியாகி சுந்தராம்பாளின்  இல்லத்தில் அவரது குடும்த்தினரிடம் முதல் சேவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post