தூத்துக்குடி கடற்கரையில் மிதந்த பெண் சிசு! போலீஸார் விசாரணை!


தூத்துக்குடி பீச் ரோட்டில் கடற்கரையில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி பீச் ரோட்டில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மிதப்பதாகவும் அதனை மீன்கள் கடித்து வருவதாகவும் அந்தப் பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் மூலமாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது 


இதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை யாரேனும் வீசி சென்றனரா? அல்லது பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post Next Post