வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாண்டஸ் புயலாக வலுப்பெற்றதையடுத்து தூத்துக்குடி வவுசி துறைமுகத்தில் இரண்டாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்திலையில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் முதல் 15 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.