வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் 12ம் தேதி திங்கள்கிழமை காலை 11மணிக்கு தூத்துக்குடி பீச்ரோட்டில் மீன்பிடி துறைமுகத்திற்கு எதிரே அமைந்துள்ள S.R.M. ஹோட்டலில் வைத்து ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு,
கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரசின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான G.K.வாசன் அவர்களுடைய பிறந்த தின விழாவும், தமிழக அரசின் மக்களை வாட்டி வதைக்கும் மின்சாரக் கட்டணம், பால் விலைஉயர்வு, ரேசனில் தரமற்ற அரிசி வழங்குதல், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்காசோளம் ஆகியவற்றின் முறைப்படி இன்சூரன்ஸ் வழங்க கோரியும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் அரசு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.