கோவில்பட்டியில் சட்டமேதை அம்பேத்கார் நினைவு தினம் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

 

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே  உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியதை செலுத்தினர்.


அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக., வழக்கறிஞரணி செயலாளர் சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்பு ராஜ், ஆவின் தலைவர் தாமோதரன், நகராட்சி கவுன்சிலர்கள் கவியரசன் , செண்பகமூர்த்தி, செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


நகர, ஒன்றிய திமுக., சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அப்போது, திமுக., சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் மணி, நாலாட்டின்புத்தூர் முன்னாள் பஞ்., தலைவர் செல்வகுமார், நகர அவை தலைவர் முனியசாமி, ஒன்றிய அவை தலைவர் பொன்னுச்சாமி, மாத்தையா உட்பட பலர் உடனிருந்தனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், நகர செயலார் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,


மதிமுக., சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்தார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் , பவுன் மாரியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக  எஸ்.சி துறையின் மாநில துணை த் தலைவர் மாரிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில்  காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட செயலர்Bsnl  துரைராஜ்,  மனித உரிமை பிரிவு காளிதாஸ்,   பிரேம்குமார் , சிறுபான்மை பிரிவு அருள்தாஜ் ,அமைப்புசாரா பிரிவு ஜோஷுவா, லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு  சார்பில் அதன்  தலைவர் தமிழரசன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின், பொருளாளர் செல்லத்துரை (எ) செல்வம், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்ட உதவித்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலக்குழு உறுப்பினர் முத்துச்செல்வம், ஐ.என்.டி.யுசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்டத்தலைவர் கருப்பசாமி, பகத்சிங் ரத்ததானக் கழக நிறுவனர் காளிதாஸ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் கலைச்செல்வன் மற்றும் காங்கிரஸ் சிறுபான்மை மாவட்டத் தலைவர் அருள்தாஸ் உட்பட கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தாமோதரன் மாலை அணிவித்தார். மாவட்ட இணை செயலாளர் அருள்ராஜ், நகர தலைவர் ஜெயமணி மற்றும் தாவீதுராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தொகுதி செயலாளர் ரவிக்குமார், தொகுதி தலைவர் ,தங்க மாரியப்பன், வேலாயுதபுரம் கிளை செயலாளர் ரங்கநாதன் , வடக்கு மாவட்ட தலைவர் ஜெயபாசு, தொகுதி பொருளாளர் குமார் ராஜா, நகர் செயலாளர் மகாராஜா, நகர தலைவர் ஜெபஸ்டின்  உள்பட பலர் கலந்து கொண்டனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post