வாக்களிப்பது நமது உரிமையும். கடமையும் கூட...



ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்,அங்கன்வாடி பணியாளர் மற்றும் வருவாய் துறை யினர், கல்வித் துறையினர் பங்கேற்ற வாக்காளர்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இப் பேரணியை,ச த்திய மங்கலம் வருவாய் வட்டாட்சியர் சங்கர் கணேஷ்  கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி அத்தாணி சாலை, மைசூர் டிரங்க் ரோடு,பவானி ஆற்று பாலம் வழியாக சத்தியமங்கலம் நகராட்சி வளாகத்தை  அடைந்தது.பேரணியில் பங்கேற்றவர்கள் ''வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என வாக்காளர் உறுதி மொழி ஏற்றனர். பேரணியை  சத்திய மங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி 
ராம சாமி  நிறைவு செய்து வைத்தார். 
நிகழ் ச்சி யில்  துணை வட்டாச்சியர் விஜய சாமூண்டிஸ்ரி, வருவாய் ஆய்வாளர் ஜீவன், கிராம நிர்வாக அலுவலர்  ராஜசேகர், மாதேஸ்  உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர், பள்ளி மற்றும் கல்லூரிநாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பேரணியொட்டி,சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்க் கொண்டனர்.

Previous Post Next Post