குருப் 1 தேர்வு அறிக்கை !!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என  அறிவித்துள்ளது
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு  ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும். குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
www.tnpsc.gov.in,  www.tnpsc.exam.net,  www.tnpsc.exam.in
ஆகிய இணையதள பக்கங்களில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்குள்ளாகவே  குருப் 1 தேர்வு  முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்,சி  திட்டமிட்டுள்ளது.



Previous Post Next Post