மினி மராத்தானில் ஷூ இல்லாமல் ஓடி 8 இடம் பிடித்த பள்ளி மாணவிகள்; ஷூ வாங்கிக் கொடுத்த கனிமொழி எம்.பி .!*


தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் தவிர முதல் பத்து இடங்களில் முதலிடம் உள்பட 8 இடங்களை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராபுரம் கிராம கமிட்டி மேல்நிலைபள்ளியை சேர்ந்த பள்ளி மாணவிகள் பிடித்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் காலணிகள் இல்லாமல் வெறும் கால்களால் ஓடி வெற்றி பெற்றுள்ளனர். இதனை அறிந்த கனிமொழி கருணாநிதி எம்.பி உடனடியாக அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று காலணிகளை வாங்கி பரிசளித்துள்ளார்.

Previous Post Next Post