17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்.!! - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது.!


17 வயது சிறுமியிடம்  திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காமராஜ் (30), (த/பெ. மிக்கேல் தெற்கு சிந்தலக்கட்டை, கடம்பூர்) என்பவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் மாரியம்மாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி காமராஜை கைது செய்தார்.

Previous Post Next Post