தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட எஸ்பி. பாலாஜி சரவணன் பங்கேற்பு.!


போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு  தமிழக முதல்வர் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். 

மாநிலம் முழுவதும் போதைப்பொருளை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள்.


இந்நிலையில்  தமிழக முதல்வர்  இன்று (11.08.2022) முதல் வருகிற 19.08.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, 

போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு நேரடியாக சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

அதனை தொடர்ந்து அவர் தலைமையில்  ‘போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமால் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன், 


போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் போதைப்பொருட்களின் உற்பத்தி நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழகத்தில் 

வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.

Previous Post Next Post