துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - புதிய வகை கொரோனாவா என கண்டறிய பரிசோதனை.!

 

துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய வகை கொரோனாவா என கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளில் சிலருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post