இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்தித் தொகுப்பு.!

✅திருவள்ளூர் - சிறுவாபுரி முருகன் கோயிலில் காணும் பொங்கல், செவ்வாய்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

__________________________

✅புதுக்கோட்டை -ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 590 காளைகள் களம் கண்ட நிலையில் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவன்மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
__________________________

✅மதுரை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காணவந்த உசிலம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இடது பக்க வயிற்றில் காளை முட்டி படுகாயமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
__________________________

✅சென்னை - குன்றத்தூர் அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்து 25 பேட்டரி பைக்குகள் சேதமடைந்துள்ளது. பெங்களூவில் இருந்து பைக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது
__________________________

✅கரூர் - குளித்தலை அருகே ஆர்.டி. மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் சிவகுமாரின் பார்வை பறிபோனது. காளை முட்டியதில் பள்ளபட்டியை சேர்ந்த இளைஞர் சிவகுமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது. இளைஞர் சிவகுமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடுபிடி வீரர் சிவகுமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்து இருந்த போது காளை குத்தியது.
__________________________

✅தேனி மாவட்டம் - பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை நடந்த பொங்கல் விழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏர்பட்டத்தையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்
__________________________

✅செங்கல்பட்டு - மாமல்லபுரம் அருகே ஒரு நட்சத்திரம் ஹோட்டலில் குடும்பத்தினர் பெற்றோர்களுடன் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடுமுறையை கழிக்க வந்த போது நடந்த சம்பவம். மாமல்லபுரம் அருகே ஒரு நீச்சல் குலத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி பலி ஆனது நிகழ்ந்த சோகம் அரங்கேறியது
__________________________

✅புதுக்கோட்டை -  திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வன்னியன் விடுதிக்கு ஜல்லிக்கட்டு காளைகளை இறக்கிவிட்டு மீண்டும் காளைகளை ஏற்றிக்கொண்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விராலிமலை நோக்கி சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தும், 2 காளைகள் உயிரிழந்துள்ளது.
__________________________

✅திண்டுக்கல் -  பழனி பேருந்து  நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் சோதனை செய்ததில் கஞ்சாவுடன் இருந்த பெண்ணை பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் கைது செய்தார்.
__________________________

✅கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
__________________________

✅ஈரோடு மாவட்டம் -அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே அந்தியூர் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் டி எஸ் மீனாட்சிசுந்தரம் தலைமையில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது‌. இதில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
__________________________

Ahamed

Senior Journalist

Previous Post Next Post