துருக்கி நிலநடுக்கம் - இதுவரை 568 க்கும் மேற்பட்டோர் பலி.! - இடிபாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்களால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் .! - பிரதமர் மோடி இரங்கல்.!

 


மத்திய துருக்கியில் இன்று அதிகாலை த 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 568 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என, அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் உடமைச் சேதங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post