எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ‘அதிமுக வேட்பாளருக்கான  படிவங்களில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்ட படிவங்களை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டது.   இந்த உத்தரவு என்பது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post