உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படம் திருப்பூரில் ரீலிஸ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் கொண்டாட்டம்

 தருப்பூர் உஷா திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கண்ணை நம்பாதே என்ற திரைபடத்தின் முதல் காலை காட்சி வெளியீட்டு விழா ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்எஸ்கே சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. 


சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மண்டல தலைவர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். படத்தை காண வந்த ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவிற்கு ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் சஷ்டி விஜயகுமார், செந்தூர் ஆனந்த், தம்பி குருபரணி, பாலகுமார் , ஆட்டோ முருகன், சங்கர், மனோஜ், கவின் குமார் , சூர்யா பிரகாஷ் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Previous Post Next Post