தண்டவாளத்தில் கடந்த பீகார் தொழிலாளர் சடலம் - கொலை செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் குவிந்தனர்


திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பீகார் மாநில தொழிலாளர் சடலம் - கொலை செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர்...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை  மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் நேற்று இரவு ஒரு மணி அளவில் திருப்பூர் தண்டவாளத்தில் கேரளாவில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக இருந்துள்ளார் . இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இன்று காலை சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே  காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் சஞ்சீவ் குமாரின் கைபேசி மற்றும் வாகனங்கள் காணவில்லை எனவும் எனவே அவர் கொலை செய்யப்பட்டு  அவரின் உடைமைகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். அவர்களிடம் காவல்துறை சார்பில் உரிய விசாரணை நடக்கப்படும் என தொடர்ந்து உறுதி அளித்தனர் இருப்பினும் கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை காண்பிக்க வலியுறுத்தி வருகின்றனர் . காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படும்போது நள்ளிரவு 12.56 மணிக்கு கேரளா திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் சடலமாக இருந்ததாகவும் ரயிலை அவர் கடக்க முயற்சித்த போது ரயில் மோதி உயிரிழந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.  இருப்பினும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக பரப்பப்படும் வீடியோக்களின் காரணமாக தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களுடைய அச்ச உணர்வு ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

nithibala

LIFE MAKES MANY CHANGES WITHIN A FRACTION OF A SECOND.

Previous Post Next Post