வதந்திகளால் ஏற்பட்ட அச்சத்தை நீக்கி புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க!... எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., அறிக்கை

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக ஏற்பட்ட வதந்தியை தொடர்ந்து அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஹார், உத்திர பிரதேசம். ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர்.பல்லாண்டுகளாக இவர்கள் இங்கே பணியாற்றியும் ஒரு சிலர் வளர்ந்து இங்கே தொழில் நிறுவனங்களை துவங்கியும் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் போது இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலை துரதிர்ஷ்டவிதமானது.

கடந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொரோனா கால ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடி அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது மேலும் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி உற்றாருக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தந்து அவர்களின் சொந்த மாநிலத்திற்கே சிரமமின்றி அழைத்து செல்லபட்டதை நினைவு கூற விரும்புகிறேன்.

திருப்பூர் மாவட்டத்தில் பெருகி கிடக்கும் வேலை வாய்ப்பின் மூலம் திருப்பூர் மாநகரிலும் பல்லடத்திலும் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு, சாய ஆலை, நூற்பாலை, விசைத்தறி, ப்ரிண்டிங் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள், ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்தது முதல் நூல் விலை உயர்வு, கடுமையான மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஜவுளி தொழில் புலம் பெயர் தொழிலாளர்கள் பணியை விட்டு செல்லும் நிலையில் மிகப்பெரிய சவாலையும், உற்பத்தி தடையையும் சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இப்பிரச்சனையை சீர் செய்ய அனைத்து முயற்ச்சிகளும் எடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் நிலையில் தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களை தீர்வு கண்டு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் என்றும் தங்களை நம்பி வருவோருக்கு துணை இருப்பார்கள் என்ற வாலாற்று உண்மையை உறுதிபடுத்துகின்ற வகையில் சிறிதும் சமூக பொறுப்பின்றி தமிழ்நாடு புலம்பெறும் தொழிலாளர்களுக்கு ஆபத்தான மாநிலம் என்பது போன்ற வதந்திகளை பரப்பும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து மேலும் இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Previous Post Next Post