கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு

கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு நடைபெற்றது.



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கே.எம்.எஸ்.102வது பிறந்தநாள் கட்டுரைப் போட்டியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது .



ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார் .தேவகோட்டை விடுதலை வீரர் கே. எம் .எஸ். 102 ஆம் ஆண்டு  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழ்க நீ  எம்மான் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற   இப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி நதியாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர் .நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.


 


Previous Post Next Post