ஈரோடுமாவட்டம், சத்தியில், பி.சி.ஆர்.சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கண்டனஆர்ப்பாட்டம் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்தினர்.


சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்களை, கைது செய்ய வேண்டும், வன் கொடு மை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும் என  வலியுறுத்தி, சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் முன்பு,தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் பிற்படுத்தப் பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் கூட்டமை ப்பு சார்பில், தமிழ்மாநில விவசாயிகள் பாதுகா ப்பு சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற் றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள்    சங்க மாநில பொதுச்செயலாளர் வேலு மணி, வழக்கறிஞர் நித்தியானந்தன். தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு நலச்சங்க மாவட்டச் செய லாளர் நட ராஜ் மற்றும் ரங்கசாமி,பூமார்க்கெட் சிவலிங்கம்,, துரை (எ) சந்திரசேகர்,, வன்னியர் சங்க ராஜா,மூர்த்தி, உள்ளிட்ட 20க் கும் மேற் பட்ட அமைப்புகளை சார்ந்த 500க்கும் மேற்பட் டோர்   கலந்துகொண்டு,,பிசிஆர் சட்டத்தை ரத்து செய் ய வலியுறுத்தி, கண்டன முழக்கங் கள் எழுப்பினர். காவல்துறை அனுமதியின்றி, கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியதால், ஆர்ப்பாட் டகாரர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.






Previous Post Next Post