சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து நேர்ந்தது .

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா பெண்ணாடத்தில் இயங்கிவரும் ராம்கோ சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் மூலக்கூறு ஆனா கிளிஞ்சல் சுண்ணாம்பு

 ராம்கோ கம்பெனி லாரி மூலம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இயங்கிவரும் ராம்கோ கம்பெனிக்கு பெண்ணாடத்திலிருந்து வேப்பூர் வழியாக திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்க சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் சுப்பையா வயது 49 என்பவர் ஓட்டி வந்த லாரி ரெட்டாக்குறிச்சி அருகே வரும்போது லாரியின் புகை போக்கியில் அதிக அளவில் புகை வந்துள்ளதை கண்டு வண்டியை நிறுத்தி பார்க்கும் போது லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. 

 


 

தகவலறிந்து வந்த வேப்பூர் தீயணைப்பு படையினர் மற்றும் சின்னசேலம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர் இருப்பினும் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இந்த விபத்தால் சேலம் - சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இச்சம்பவம் குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




Previous Post Next Post