பாஜகவால் டெல்லி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களிடம் 'Blank cheque'கேட்கிறார் அமித்ஷா: பாஜகவால் டெல்லி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா?...அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!



70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம் கண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் நேற்று பேட்டியளித்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.,வால் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்து, அக்க்ட்சியை சேர்ந்த யார் கூட வேண்டுமென்றாலும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், மக்களிடம் இருந்து பிளாங்க் செக் கை அமித்ஷா கேட்கிறார். மக்களிடமிருந்து உத்தரவு வந்து பின்னர், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்போம் என அமித்ஷா கூறுகிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். படிக்காத அல்லது தகுதியில்லாத நபரை அமித்ஷா அறிவித்தால் என்ன செய்வது? அது டெல்லி மக்களை ஏமாற்றுவது போல் ஆகும்.



பாஜக-வால், யார் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? அக்கட்சியை சேர்ந்த யாருடனும் விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளேன். நாளை (பிப்.,5) பிற்பகல் 1 மணிக்குள் அக்கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டால், மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் பேசினார். டெல்லி விதான் சபையில் கடந்த 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட டெல்லி ஜன லோக்பால் மசோதா கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மசோதா நிறைவேற்றப் படுவதற்கான போராட்டத்தை ஆம் ஆத்மி அரசு முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.



Previous Post Next Post