அரசு மருத்துவமனை டாக்டர், நர்சுகளுக்கு பாதுகாப்பு கவச ஆடைகள்: கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ சொந்த செலவில் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் அரசு மருத்துவ மணையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரானா தொற்று பரவாமல் பணி புரிவதற்கு வசதியாக பாதுகாப்பு உபகரணங்களை  பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் தனது சொந்த நிதியில் வாங்கி பல்லடம் அரசு மருத்துவமணை தலைமை மருத்துவர் சந்திரா வசம் வழங்கினார் இந்நிகழ்வில் பல்லடம்  ஆணையாளர்  கணேசன்,  பொறியாளர் சங்கர்,  சுகாதார ஆய்வாளர்  சிவகுமார், அரசு மருத்துவர்கள் மற்றும் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.எம்.ராமமூர்த்தி, தங்கவேல், ஆகியோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்


Previous Post Next Post