வேப்பூர் சபரி பவுண்டேஷன் சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு கொரோனா உதவி






வேப்பூர் சபரி பவுண்டேஷன் சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு கொரோனா உதவி தொகை வழங்கபட்டது. 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம், வேப்பூரில் சபரி பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சபரி ஸ்டோர் உரிமையாளர்   ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேப்பூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம், வருவாய் ஆய்வாளர் பழனி, வணிகர் சங்க தலைவர் சொல்லழகன் முன்னிலை வகித்தனர்.

 

வேப்பூர் காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் கவிதா கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், முடி திருத்துபவர்கள், சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள், புகைப்பட கலைஞர்கள், நடைபாதை வியாபாரிகள், மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 500 நபர்களுக்கு     கொரோனா உதவி தொகை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில்  அய்யனார் ஸ்டோர்  சந்திரமோகன், சிறுநெசலூர் ஊராட்சி மன்ற  தலைவர்  வேல்முருகன்,  வேப்பூர் துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், சபரி பவுண்டேஷன் சார்பில் கல்வி பயிலும் 50 மாணவர்கள்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.


 




 


 



 



Previous Post Next Post