திருச்செந்தூர், கன்னியாகுமரி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர், கன்னியாகுமரி நான்கு வழி புதிய தேசிய நெடுஞ்சாலை NH 32 அமைக்கப்பட உள்ள வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. 

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், நாகப்பட்டிணம் முதல் கன்னியாகுமரி வரை திருச்செந்தூர் வழியாக புதிய நெடுஞ்சாலை NH32 அமைக்கப்பட உள்ளது. 

இந்த  திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது 58 கிமீ வரை பயண தொலைவு மற்றும் நேரம் குறைவாகும். ஏற்கனவே கிழக்கு கடறக் ரை சாலையில் இரு வழிசாலை உள்ளது. 

அதனை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட  உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். 

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சிறப்பு வருவாய் அலுவலர் செல்வராஜ், திட்ட இயக்குநர், தேசிய நெடுஞ்சாலை தூத்துக்குடி சங்கர், தூத்துக்குடி விமான 

நிலைய உதவி பொது மேலாளர் கே.ஜி.பிஜூ,  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, செயற்பொறியாளர் தாமிரபரணி வடிநிலக் கோட்டம் (திருநெல்வேலி) அண்ணாதுரை,செயற்பொறியாளர் திருவைகுண்டம் வடிநிலக் கோட்டம் பண்டாரம், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post