பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறப்பு முகாம் - கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் முள்ளக்காடு பகுதியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான மனுக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில்  சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்

முகாமில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, 

வட்டாட்சியர் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன் ஒன்றிய பெருந்தலைவர் பாலசிங்,  ஒன்றிய துணை பெருந்தலைவர் மீரா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், 

மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜெஸி பொன்ராணி, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்  S.J.ஜெகன்,  பஞ்சாயத்து தலைவர் லங்காபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post