புளியம்பட்டி அருகே குரும்பபாளையத்தில் வாலிபர் மரணத்தில் கொலையாளிகள் கைது.


புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி, குரும்பபாளையம் கிராமத்தில் கைகலப்பில் வாலிபர் மரணமடைந்த நிலையில், வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டு, மரணமடைந்ததால். மரணத்தில் சம்பந்தப்பட்ட தலைமறைவான

கொலையாளிகளை,கைது செய்ய புஞ்சைபுளியம்பட்டி காவல் ஆய்வாளர் வேலுசாமி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், விண்ணப்பள்ளி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த மூவரை பிடித்து விசாரித்ததில், கொலை பின்னனியில் தலைமறைவான மணி(எ) சும்பிரமணி, கதிரான் (எ) கதிர்வேல், மணியின் மனைவி ராணி ஆகிய மூவரும் என அறிய வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்

கள் அண்ணாமலையை கொலை செய்யும் நோக்கிலேயே அவரை கொடூரமாக தாக்கினால் இறந்துவிடுவான் என தெரிந்தே திட்டமிட்டு தாக்கியதாகவும், அண்ணாமலை இறந்த தகவல் அறிந்து தலைமறைவானதாகவும், இன்று தப்பித்து சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில், வெளியே நடமாடியதாகவும், போலிசார் வசம் மாட்டிக்கொண்டதாகவும், தாங்களாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.  காவல் ஆய்வாளர் வேலுசாமி கொலையாளி

களை கைது செய்து, அவர்கள் ஒப்படைத்த கொலைக்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து, வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பினர். கொலையுண்ட அண்ணாமலையின் பிரேதம், பிரேத பரிசோதனை முடிந்து உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்தனர்.

Previous Post Next Post