14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.!


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியை அதே பகுதியை சேர்ந்த காமேஷ் வயது 25 என்ற வாலிபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை  5.3.2021ல் இருந்து 

தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பம் ஆனதாகவும் பின்னர் யாருக்கும் தெரியாமல் கடந்த வருடம் 9ஆம் இருபத்தி எட்டாம் தேதி மாதம் அன்று நரசிங்கபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சிவபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

 இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி குழந்தை பெற்றதால் இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காமேஷை போக்சோ சட்டம் உட்பட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Previous Post Next Post