பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி

 BREAKING 


சிவகாசி எம்.புதுப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.! - 3 பேர் உயிரிழப்பு.!! இரண்டு அறைகள் தரைமட்டம்.!

#Sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே M.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள வடிவேல் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து. 

இன்று காலை பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியின் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும் மற்றும் தீயை அணைப்பதற்கும் சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு 3 பேர் படுகாயம் எனக் கூறப்படுகிறது.

மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post