நெல்லையில் காந்தியடிகளின் நினைவு தினம் - தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்தார்


நெல்லை,ஜன.30-

காந்தியடிகளின் 74 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை  கோட்டூர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் ,மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் உதயகுமார்,ராஜகிளி ஐயப்பன், கவி பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ரயில்வே கிருஷ்ணன்,பரணி இசக்கி,கே.எஸ்.மணி, மண்டலத் தலைவர்கள் எஸ்.எஸ்.மாரியப்பன் கோட்டூர் முருகன், ரசூல் மைதீன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.மாரியப்பன்,சம்சா செய்யது உட்பட பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post