உச்சிப்புளி அரியமான் கடற்கரை பகுதியில் 16 வயது பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலி உச்சிப்புளி போலீசார் வழக்கு..


விருதுநகர் மாவட்டம் சின்னப்ப ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அவருடைய உறவினர் இறப்பிற்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்த பின்னர் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் குடும்பத்தினருடன் கடலில் இறங்கி குளித்த போது சுந்தரமூர்த்தியின் 16 வயது மகன் பிரசன்னா கடல் அலையில் சிக்கி உள்ளார்

இதையடுத்து சுந்தரமூர்த்தி உறவினர்கள் கடல் அலையில்  சிக்கிய 16 வயது பிரசன்னாவை மீட்டு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பின்னர் மருத்துவர்கள் பிரசனாவை பரிசோதித்தப்  போது இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post