கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா.!


கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் சாமக்கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சமுதாய சங்கம் பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வழியில் வந்த ஐகோர்ட் ஸ்ரீ மகாராஜா அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. 


கடந்த 18ம் தேதி அன்று கால் வைத்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தீர்த்தம் குடம்  எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள்  முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் ‌ சாமக் கொடை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் தலைவர் மகேஷ் பாலா, செயலாளர் சோலை, பொருளாளர் மாரியப்பன், துணை தலைவர் மகேஷ் குமார், துணைச்செயலாளர் ஜோதி ராஜ், ந இணை செயலாளர் சேட்டன் குமார், 

துணைப் பொருளாளர் சந்தான மாரியப்பன், விழா உதவியாளர் முருகேசன், உறுப்பினர்கள் தர்மா மாரியப்பன், சுடலை மணி, ராமசாமி, ராஜேஷ், மெய்யச்சாமி, கௌதம், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Previous Post Next Post