எட்டையபுரத்தில் சாலை விபத்தில் தாய் மகள் உள்பட 3 பேர் பலி


கோவில்பட்டி  அருகே அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய் மகள் உட்பட 3 வர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  எட்டயபுரம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக  இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற  மணிகண்ட ராஜா, கன்னிச்செல்வி,மாரியம்மாள் ஆகிய மூவர் சோழபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது அவ்வழியாக சென்ற  சரக்கு லாரி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் உள்ள சக்கரத்தில் சிக்கி  மாரியாம்மாள்,கன்னிச்செல்வி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இச்சம்பவம் அறிந்த வந்த காவல்துறை படுகாயங்கள் உடன் கிடந்த மணிகண்டன ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர் ஆனால் கொண்டு செல்லும் வழி அவரும் உயிரிழந்தார் .. 

மாரியம்மாள் கன்னிசெல்வியின் தாயர் ஆவர்,மணிகண்டராஜா கன்னிச்செல்வியின் அக்கா கணவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post