வேப்பூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3300 லஞ்சம் வாங்கிய பில் கிளர்க் மற்றும் லோடுமேன் கைது

 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  சிறுபாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் இயங்கி வருகிறது இங்கு சிறுபாக்கம், சுற்றுவட்டார  கிராம மக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்தனர். அங்கு பணியாற்றும் பில்கிளர்க் ராமசந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி இருவரும்  விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் பணம் வசூல் செய்வதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புதூர் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்ற விவசாயிடம்  200 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம்   புகார் அளித்தார்.  அதன்பேரில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்   மறைந்திருந்து   விவசாயி அழகுவேலிடம் 3,300 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பில் கிளார்க் ராமச்சந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



Attachments area
Previous Post Next Post